நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கடும் வரட்சி காரணமாக, நாளாந்தம் பொதுமக்களுக்கு தேவைப்படும் நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலையினால் நீர் மூலங்களின் நீரின் அளவு குறைந்து வருவதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.