கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் மழை

நாட்டின் மேல்,சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று காலை (17) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பாக திணைக்களம் , வெளியிட்டுள்ள  அறிக்கை பின்வருமாறு: 

2023 மே17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2023 மே17ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

மேற்கு கரையோரப்பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன