தென்னாப்பிரிக்கா அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

13 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் நேற்று (07) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் Rassie van der Dussen 108 ஓட்டங்களையும் Quinton de Kock 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். உலக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவராக  தென்னாபிரிக்க அணியின் Aiden Markram பதிவாகியுள்ளார்.அவர் 49 பந்துகளில் சதம் கடந்த நிலையில், 106 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார

429 ஓட்டங்கள் என்ற பாரிய  இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் பெரேரா 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார் ஆனாலும், குசல் மெண்டிஸ் 76 ஓட்டங்களை எடுத்து அணிக்கு கைகொடுத்தார். அதேபோல் சரித் அசலங்க 79, தசுன் ஷானக்க 68, கசுன் ராஜித்த 33, சமரவிக்ரம 23 ஓட்டங்களுடன் அணிக்கு வலுசேர்த்தனர்.  ஆனால், தனஞ்ஜெய டி சில்வா 11, மதீஷ பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் என மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதுடன் விரைவாக விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை  எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Gerald Coetzee 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன