இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல்

இந்திய மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. விலங்குகளிலிருந்து பரவும் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த கேரள மாநில சுகாதாரத் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது அதேவேளை இதுவரை இருவர் இந்த வைரஸ் காய்ச்சலினால் இறந்துள்ளதோடு 9 வயது பிள்ளை உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 21 நாளில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
இந்தியாவில் கோழிக்கோடு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலமும் இத்தொற்று நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் தொற்றாகும். இது தீவிர உடல்நலக் குறைவை உண்டாக்கி மனிதர்களை கொல்லக் கூடியது. முக்கியமாக பெரியவர்களை விட பிள்ளைகளே இந்நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிள்ளை களின் நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களை விட பலவீனமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட நபரோடு நேரடி தொடர்பு கொள்ளும் போது இவர்கள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.
இதுதொடர்பாக இந்தியாவின் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர்.நீரஜ் குமார் துலாரா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்
நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் தொற்றாகும். இது தீவிர உடல்நலக் குறைவை உண்டாக்கி மனிதர்களை கொல்லக் கூடியது. முக்கியமாக பெரியவர்களை விட குழந்தைகளே இந்நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது கவலைக்குரிய விஷயமாகும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களை விட பலவீனமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட நபரோடு நேரடி தொடர்பு கொள்ளும் போது இவர்கள் எளிதில் தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.
பிள்ளைகள் எப்போதுமே தங்கள் பெற்றோர்கள்இ உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு நெருக்கமாக இருப்பார்கள். வீட்டிற்குள்ளேயே வைரஸ் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும்இ குழந்தைகளால் தடுப்பு நடவடிக்கைகளை முழுதாக புரிந்துகொள்ள முடியாததோடு அதை ஒழுங்காக கடைபிடிக்கவும் மாட்டார்கள். இதனால் தொற்றுகள் அதிகரிக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவோஇ புரிதலோ பிள்ளைகளிடத்தில் குறைவாகவே இருக்கும். அடிக்கடி கைவ கழுவுவதின் அவசியம்இ முககவசம் – முக கவசம் அணிவதுஇ சமூக இடைவெளி ஆகியவை எவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதெல்லாம் அவர்களுக்கு புரியவைப்பது கடினமான விஷயம்.
பெற்றோர்களோ அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களோ குழந்தைகளுக்கு வைரஸ் குறித்து சொல்லிக் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். அதுமட்டுமின்றிஇ வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்தவர்களோடு இடைவெளிவிட்டு பழக வேண்டும்இ அடிக்கடி கை கழுவ வேண்டும் ஆகியவற்றையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நடப்பது சிரமமான காரியம். ஆகையால் குழந்தைகளை மாஸ்க் அணிய ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகளின் வாய் மற்றும் மூக்குப் பகுதியை மூடும் வகையில் மாஸ்க் இருக்க வேண்டும். மேலும்இ அதனை எப்படி பயன்படுத்துவதுஇ எப்படி அகற்றுவது மற்றும் பயன்படுத்திய மாஸ்க்கை எப்படி அப்புறத்தப்படுத்துவது என்பதனையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நிபா வைரஸுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி என்று எதுவும் இல்லை. அசுNயு நிபா தடுப்பூசி சோதனைக் கட்டத்தில் உள்ளது. நோய் வராமல் தடுக்கக் கூடிய தடுப்பூசிகள் எதுவும் இல்லாததால்இ குழந்தைகள் இந்நோய்க்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன