உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 9 போட்டிகளின் திகதி ,நேரம் மாற்றம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 9 போட்டிகளின் திகதி மற்றும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, அவூஸ்திரேலியா, பாகிஸ்தான் அடங்களாக 10 அணிகள் பங்கேற்கும் 13-ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5 ஆம் திகதி  இந்தியாவின் ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட போட்டிகளின் திகதிகளை  மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மொத்தம் 9 தொடரின் திகதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை  (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு போதுமான இடைவெளி கிடைக்க வேண்டும் என்பதற்காக இலங்கைக்கு எதிராக அந்த அணியின் போட்டி  அக்டோபர் 12ஆம்  திகதிக்கு பதிலாக 10 ஆம் திகதியன்று இந்தியாவின் ஐதராபாத்  செல்கிறது. இதே போல் பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டனில் நவம்பர் 12 ஆம் திகதி  நடத்த திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் இந்தியாவில் காளி பூஜை வெகுவிமரிசையாக நடக்க இருப்பதால் போதுமான பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என்று கொல்கத்தா பொலிசார் தெரிவித்துள்ளனர். . இதனால் அந்த போட்டி தற்போது 11 ஆம் திகதி நடக்கவுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன