போலி கடவுச்சீட்டில் இத்தாலிக்கு செல்ல முயன்ற 7 பேர் கைது

இத்தாலியின் ரோம் நகருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சிரிய குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளடக்கின்றனர்.

விமான நிலைய குடிவரவு கருமபீடங்களை வந்தடைந்த அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த குடிவரவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இக் கடவுச்சீட்டுகள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர்,கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் துருக்கியில் தரகர் ஒருவரிடம் தலா 2,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தி இக் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!