கொழும்பு, இலங்கை, ஜுலை 2025 – இலங்கை, ஐரோப்பிய ஒன்றிய தேசிய கலாசார நிறுவகங்கள் (EUNIC) மற்றும் Good Life X ஆகியன இணைந்து முன்னெடுக்கும் “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” எனும்…
Category: Business
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின் தென்னை தொழில்துறைக்கு பாரிய பின்னடைவு – இலங்கை தென்னை கைத்தொழில்சம்மேளனம்
இலங்கையின் தென்னை சார்ந்த பொருட்கள் மீது அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கவுள்ளமை அந்தத் துறையில் பாரிய பின்னடைவைக்கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இப்புதிய தீர்வை வரி, ஆண்டுதோறும் 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருவாய்ஈட்டும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறையை பாதிக்கும் என்பதோடு, ஆயிரக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும்நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கையின் தென்னை சார்ந்த தயாரிப்புகளை வாங்குகின்ற மிகப்பெரிய நாடாக உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 160 மில்லியன்அமெரிக்க டொலர் மதிப்புடன், துறையின் மொத்த ஏற்றுமதியில் 20% க்கும் அதிகமாக உள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில்சம்மேளனத்தின் கூற்றுப்படி, இப்புதிய தீர்வை வரி விதிப்பால் அமெரிக்க சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மை கடுமையாக பாதிக்கப்படும். பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு சலுகை வர்த்தக உறவுகள் உள்ளதால், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதரத்தைக் கொண்டிருந்தாலும், இலங்கை தயாரிப்புகள் அதிக விலை காரணமாக புறக்கணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்புதிய வரி விதிப்பு தொடர்பில் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் கருத்து தெரிவிக்கையில், “இது வெறுமனே ஒரு கொள்கை மாற்றம் மட்டுமல்ல. இலங்கை பல ஆண்டுகளாக உழைத்து வளர்த்த முழு தொழிற்துறைக்கும் அழிவைஏற்படுத்தும் அடியாகும். எமது தயாரிப்புகள் அவற்றின் தூய்மை, சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்காக உலகம் முழுவதும்அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், 30% வரி அவற்றை வாங்குபவர்களுக்கு கட்டுப்படியாகாததாகமாற்றுகிறது. தரத்தின் காரணமாக அல்ல, விலை காரணமாக மட்டுமே நாங்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவோம். ஆரம்பத்தில்முன்மொழியப்பட்ட 44% இலிருந்து வரி குறைக்கப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், 30% வரி கூட எங்களின் ஏற்றுமதிபோட்டித்திறனுக்கும், இத்தொழிலைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பைஏற்படுத்தும்” என தெரிவித்தார். அமெரிக்க வரி விதிப்பால் ஆபத்தில் உள்ள இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் உலர்ந்த தேங்காய் (desiccated coconut), சுத்தமான மற்றும்சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், கிரீம், இளநீர், தென்னம்நார் தயாரிப்புகள், செயலாக்கப்பட்ட கார்பன் மற்றும்தேங்காய் முந்திரை அடிப்படையிலான தோட்டச்செய்கை ஊடகங்கள் (growing media) ஆகியவை அடங்கும். இவற்றில் பெரும்பாலானவைஇலங்கை உலகச் சந்தையில் முன்னோடியாக அறிமுகப்படுத்திய இந்த உயர்தர ஏற்றுமதிப் பொருட்களை வாங்குபவர்கள் இனி மலிவானநாடுகளிலிருந்து பொருட்களை வாங்க நிர்பந்திக்கப்படுவர். அமெரிக்க வரி விதிப்பானது வெறும் வர்த்தக புள்ளிவிபரங்களை மட்டும் பாதிக்கவில்லை. சிறு விவசாயிகள், பதப்படுத்துபவர்கள், தொழிற்சாலைதொழிலாளர்கள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உட்பட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கள்வாழ்வாதாரத்திற்கு தென்னை தொழிலையே நம்பியுள்ளனர். உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறைகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடிவேலைவாய்ப்புகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஏற்றுமதி தேவை திடீரெனக் குறைவதால், விற்கப்படாத பொருட்கள் உள்நாட்டுசந்தையில் குவிந்து, பண்ணை நுழைவாயில் “farm gate” விலைகள் குறைந்து, ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உயரும் உற்பத்திச் செலவால்பாதிக்கப்பட்ட கிராமப்புற குடும்பங்களின் வருமானம் முற்றிலுமாக துண்டிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். தென்னை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதால், பரந்த பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்எச்சரிக்கை விடுத்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் சரிவை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாகஇலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சீர்திருத்த திட்டத்தின் கீழ் தன்னை ஒரு நம்பகமான, போட்டித்திறன் மிக்க நாடாக நிலைநிறுத்தமுயற்சிக்கும் நேரத்தில், ஏனைய தென்னை உற்பத்தி நாடுகள் சிறந்த கொள்கை ஆதரவு மற்றும் குறைந்த செலவு கட்டமைப்புகளைவழங்குவதால், உள்ளூர் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்துறை செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு மாற்றக்கூடும் அபாயம் உள்ளது. இதனால்வேலைவாய்ப்புகள், மூலதனம் மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளும் நாட்டை விட்டு வெளியே செல்லும் நிலை உருவாகாலாம். இதைக் கருத்தில் கொண்டு, தென்னை தொழில்துறையைப் பாதுகாக்க அவசர மற்றும் ஒருங்கிணைந்த அரசாங்க நடவடிக்கைக்கு இலங்கைதென்னை கைத்தொழில் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், வரிச் சலுகை அல்லது வரிவிலக்குகளுக்கான வாய்ப்புகளை ஆராயஅமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது. முக்கிய சந்தைகளுக்கு நியாயமானஅணுகலை உறுதிப்படுத்தும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்யவும், ஏற்றுமதியாளர்கள் குறுகிய காலத்தில் சந்திக்கும் நெருக்கடிகளைசமாளிக்கவும், நீண்ட கால போட்டித்திறனை மேம்படுத்தவும் அரசு இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இலங்கைதென்னை கைத்தொழில் சம்மேளனம் மேலும் வலியுறுத்துகிறது.…
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா வர்த்தக வாகனங்களுக்கு விசேட லீசிங் சலுகையை வழங்கும் HNB PLC
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Mahindra Bolero City Pickups, ALFA Plus Load Carriers, Mahindra…
“SDB வியாபார பிரதிபா 2025” வர்த்தக சந்தை ஊடாக உள்ளுர்தொழிற்முயற்சியாண்மையாளர்களை உயர்த்தும் SDB வங்கி
உள்ளுர் தொழில்முயற்சியாண்மையாளர்களை உயர்ச்சியடையச் செய்தல் மற்றும் அவர்களுக்காக புதிய சந்தைகளைத்திறத்தல் என்பவற்றுக்கான அதனது அயராத அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, SDB சமீபத்தில் எப்.ஆர்.சேனநாயக்கமாவத்தையிலுள்ள கொழும்பு நகர சபை மண்டப வளாக முன்றலில், “SDB வியாபார பிரதீபா 2025” வர்த்தக சந்தைதுவக்க விழாவினை பெருமையுடன் நடாத்தியது . இந்நிகழ்வானது SDB வங்கியின் கிராமிய எழுச்சிநிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், அது மேல் மாகாண ஆளுநர், திரு. ஹனிப் யூசுப்; SDB வங்கியின் தவிசாளர், திருமதி டினிதி ரத்நாயக்க; நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு. கபில ஆரியரத்ன; மற்றும் SDB வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ அணி என்பவற்றின்பங்கேற்பினால் சிறப்பிக்கப்பட்டிருந்தது. இச்சந்தையானது பாரம்பரிய உணவு மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்டஉணவுகள், சூழல் நேய உற்பத்திகள், கைவினைப்பொருட்கள், மற்றும் பத்திக் கைதறி ஆடைகள் போன்ற பல்வேறுஉற்பத்திகளினை சிறப்பம்சமாக கொண்டிருந்ததுடன், 100 அதிசிறப்பான உள்ளுர்தொழில்முயற்சியாண்மையாளர்களின் பன்முக திறன்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்பட்டது. அதனது துவக்கம் முதலே, SDB வங்கியின் கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை முழுதுமானசுயதொழில்வாண்மையாளர்களை வலுப்படுத்துவதற்கான கருவியாகவே விளங்கிவந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒருங்கிணைவினை வளர்ப்பதன் ஊடாக, நாடளாவியரீதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000 இற்கும் மேற்பட்ட சுயதொழில்வாண்மையாளர்களுக்குவெற்றிகரமாக பலனளித்துள்ளது. இப்பயணத்தின் ஒரு அங்கமாக, SDB வங்கியானது உயர் தரத்திலான உற்பத்திபொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக, குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் அங்கீகரிக்கப்படும் நிலையைஉருவாக்கி, வர்த்தக சந்தை அனுபவத்தினை பழக்கப்படுத்திக்கொள்ள இச்சுயதொழில்வாண்மையாளர்களுக்கு உதவபல சிறிய அளவிலாள சந்தைகளை உருவாக்கியிருந்தது. SDB வங்கியினால் இச்சந்தையை ஒழுங்கமைப்பதன் மையநோக்கமாக, இவ்வடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக, “SDB வியாபார பிரதீபா 2025”, இச்சிறியவிலானஉள்ளுர சுயதொழில்வாண்மையாளர்களின் உற்பத்திகள் மற்றும் வர்த்தக நாமங்களிற்கான புதிய சந்தைவாய்ப்புக்களையும், புதிய வாடிக்கையாளர் பிரிவுகளையும் மற்றும் நல்ல அங்கீகாரத்தினையும் திறந்துள்ளது. இந்நிகழ்வின்போது, இவ்வுள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களின் வியாபாரத்தினை மேலும் விளம்பரப்படுத்துவதற்காக SDB வியாபார பிரதீபா மார்க்கெட் பிளேஸ் எனும் தலைப்பில் சந்தை வடிவில் முகநூல்சமுதாய குழுவொன்றையும் ஆரம்பித்துள்ளது. இப்புத்தாக்கமான மேடையானது அவர்களது அடைவுகளைவிரிவுபடுத்துவதற்கும் தங்களது உற்பத்திகளை பரந்த வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும் ஆர்வமிகுவாயப்புக்களை வழங்குவதுடன், வளர்ச்சி மற்றும் அறியப்படுவதற்கான புதிய பாதைகளையும் உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றும்போது, நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்னஅவர்கள், “எம்முடைய கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது ஒரு துவக்கம் என்பதற்கும் அப்பாலானது; இது உள்ளுர்சுயதொழில்வாண்மையாளர்களை கிராமிய சமுதாய எழுச்சியூடாக வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தினைமுற்செலுத்தவும் மற்றும் எமது தேசத்தின் சுயதொழில்வாண்மையாளர்களது திறனுக்கான வாய்ப்புக்களைஉருவாக்குவதற்குமான செயற்பாடாகும். எம்முடைய சொந்த சுயதொழில்வாண்மையாளர்களது திறன்களையும்புத்தாக்கத்தினையும் மதித்து வளர்க்கும் வங்கியொன்றாக, அவர்களது அனைத்து வகையான வியாபாரநடவடிக்கைகளின் அபிவிருத்தியிலும் ஆதரவளிப்பதில் மிக்க பெருமிதம் கொள்கின்றோம்.” என்றார். இவ்வர்த்தக சந்தை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சந்தை இடங்கள் என்பவற்றின் ஊடாக, SDB வங்கியானதுஇலங்கையின் அபிவிருத்தி வலு மையமாக விளங்கும் அதன் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது. வியாபராவளர்ச்சிக்கான விலைமதிப்பற்ற மேடையொன்றினை உருவாக்கியிருப்பதன் ஊடாக, ஒரு நேரத்தில் ஒருவியாபாரத்திற்காக சுயதொழில்வாண்மை கிடைப்பரப்பை நிலைமாற்றுவதனை தொடரும்.
சலுகை அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்க இலங்கைஇராணுவத்துடன் இணைந்த சுவசெவன மருத்துவமனை
கண்டியில் உள்ள முன்னணி தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான சுவசெவனமருத்துவமனை, இலங்கை இராணுவத்திற்கான ‘சுவசெவன காப்புறுதித் திட்டத்தின்’ கீழ் இராணுவ வீரர்களுக்குசலுகை அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக இலங்கை இராணுவத்துடன்கைகோர்த்துள்ளது. இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டதன் மூலம், தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை ஆதரிப்பதில் சுவசெவனவின்உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தின் சார்பாக பிரிகேடியர் பெனாண்டோ, மேஜர்தனுஷ்க குமார மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் பிரேமச்சந்திர ஆகியோர் கைச்சாத்திட்ட அதே நேரத்தில்சுவசெவன மருத்துவமனை வணிக மேம்பாட்டுத் தலைவர் ஸ்ரீமத் வெலிவிட்ட, சந்தைப்படுத்தல் நிர்வாகி மிஸ்லக்ஷானி பெரேரா மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி அஷான் பிரேமச்சந்திர ஆகியோர் மருத்துவமனையைபிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இராணுவ உறுப்பினர்களுக்கு பல்வேறு பிரத்தியேகசலுகைகளை வழங்கும், தரமான மருத்துவ சேவைக்கான உயர்ந்த அணுகலை சுவசெவன மருத்துவமனை உறுதிசெய்யும். இந்தக் கூட்டாண்மையின் கீழ், சுவசஹன காப்புறுதித் திட்ட உரிமையாளர்களுக்கு இதில் இணைவதற்கானஆரம்ப கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதோடு, OPD வருகைகளுக்கான இலவச ஆலோசனைகள் மற்றும்பல்வேறு மருத்துவ சேவைகளில் முக்கிய தள்ளுபடிகள் ஆகியன வழங்கப்படும். CT Scans, MRI, Mammograms, X-rays, Ultrasounds உள்ளிட்ட ஆய்வக சோதனைகள் மற்றும் கதிரியக்க சேவைகளில் 20% தள்ளுபடியுடன்கூடிய கட்டணக் கழிவு வழங்கப்படும். ECHO மற்றும் ECG சோதனைகளுக்கும், உள்நோயாளி பராமரிப்புக்கானஅறைகளுக்கான கட்டணங்களுக்கும் இதே தள்ளுபடி வழங்கப்படும். அது மாத்திரமன்றி, இருதய பைபாஸ்அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ரூ. 50,000 தள்ளுபடி மூலம் பயனடைவார்கள். அதே நேரத்தில்மருத்துவமனையிலிருந்து 10 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் இலவச அம்பியூலன்ஸ் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த சுவசெவன மருத்துவமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரிநளின் பஸ்குவல், “இலங்கை இராணுவம் எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை ஆற்றியுள்ளது. மேலும் இந்த முயற்சியின் மூலம் அவர்களின் சுகாதாரத்தேவைகளை ஆதரிப்பது எமது பாக்கியமாகும். சுவசெவன மருத்துவமனை ஆகிய நாம், உயர்தரம் மிக்க, அனைவரும் அணுகக்கூடிய மருத்துவ சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளோம். அத்துடன் இந்த கூட்டாண்மைஎமது நாட்டிற்கு சேவை செய்பவர்களுக்கு நாம் சேவை செய்வது தொடர்பில் கொண்டுள்ள தொடர்ச்சியானஅர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார். சுவசஹன நலன்புரி காப்புறுதித் திட்டம் ஆனது, இராணுவ வீரர்களுக்கு விரிவான மருத்துவ மற்றும் நிதிஉதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான சுகாதார முயற்சியாகும். இந்தத் திட்டம்மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், கடுமையான நோய்கள் மற்றும் அவயவம் செயலற்றுப் போதல் தொடர்பானசெலவுகளுக்கு காப்புறுதிகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சேவைஆற்றுபவர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது. சுவசெவன மருத்துவமனை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நோயாளர்பராமரிப்புடன், கண்டியில் சுமார் நான்கு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நம்பகமான பெயராகதிகழ்ந்து வருகிறது. மிக வசதியாக நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, உயர் பயிற்சி பெற்றநிபுணர்களின் குழு மூலம் முழு அளவிலான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இலங்கையின்மலைநாட்டுத் தலைநகரில் ஆறுதளிக்க்கும் வகையிலும், நோயிலிருந்து மீட்சி பெறவுமாக வடிவமைக்கப்பட்ட150 சொகுசான, தரமான அறைகளுடன், மருத்துவச் சிறப்பின் மிக உயர்ந்த தரத்தை வழங்குவதில் சுவசெவனஉறுதிபூண்டுள்ளது.
காப்புறுதி/தரகு கம்பனிகளுக்கு இடையிலான 2025 வினா – விடை போட்டியில் சம்பியனான HNB பொதுக் காப்புறுதி
இலங்கையின் பொதுக் காப்புறுதி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் HNB General Insurance Limited (HNBGI), இலங்கை காப்புறுதி கல்வி நிறுவகத்தின்…
10வது பந்தயத்திற்காக வெற்றிகரமாக மீளவந்த வளவை சுபர்க்ரோஸ் மூலம் மோட்டார் பந்தயத்தில் மைல்கல்லை எட்டச்செய்த ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே
ஐந்து வருட காத்திருப்பின் பின்னர் மாபெரும் வெற்றியினை உருவாக்கி, இலங்கையின் மிகமுக்கிய மோட்டார் பந்தயங்களில் ஒன்றாக மீளவும் வெற்றிபெற்றுள்ளது ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே…
நிம்னா & இசுரு: TikTok மூலம் இலங்கையர்களை மகிழ்விக்கும் தம்பதியர்
‘வாழ், காதலி, சிரி’ என்ற கோட்பாட்டை உண்மையாக கடைபிடிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி இருப்பவர்களும் அதை தனிப்பட்ட வாழ்வில்மட்டுமே வைத்திருப்பர். ஆனால் நிம்னா மற்றும் இசுரு (@nimnastiktok)) என்ற TikTok ஜோடி, தங்களது அன்றாட வாழ்வின்தனித்துவங்களையும், அவர்களிடையே உள்ள இயல்பான புரிதலையும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியாக பகிர்ந்துவருகின்றனர். சிலர் அவர்களை வேடிக்கையான, வேகமான காணொளிகளுக்காக அறிவர். மற்றவர்கள் தம்பதி உள்ளடக்கத்தில் விளம்பரங்களைஎளிதாக இணைக்கும் திறனுக்காக அறிவர். ஆனால் அவர்களை அறிந்த எவரும் சொல்வர் – அந்த குரல்தான் சிறப்பு. அந்த தனித்துவமான கீச்சுக்குரல், வேகமாக்கப்பட்ட தொனி, இப்போது அவர்களின் அடையாளமாக மாறிவிட்டது. நிம்னா மற்றும் இசுருவை அறிந்திருந்தால், அவர்களின்முகங்களைக் காணும்போதே அந்த குரலை தங்கள் மனதில் கேட்க முடியும். நிம்னா கண்டியைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி. இசுரு குருநாகலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். இருவரும்பாரம்பரியமான பாதையில் நிலையான வேலைகளுடன் இருந்தனர். ஆனால் படைப்பாற்றல் மிக்கவர்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில்வெறும் ஆர்வத்தினாலும், சிறிது சலிப்பினாலும் TikTok இல் வீடியோக்களை பதிவு செய்யத் தொடங்கினர். அவர்களின் ஆரம்பகால வீடியோக்கள்சாதாரண தம்பதி தருணங்களைக் காட்டின. வேடிக்கையான விவாதங்கள், கிண்டல்கள், விளையாட்டான உரையாடல்கள். இவை திரைக்கதைஇல்லாமலேயே உண்மை வாழ்க்கையைப் பிரதிபலித்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் அவர்களை உண்மையில்பிரபலமாக்கிய காரணம் முற்றிலும் எதிர்பாராதது. ஒரு நாள் மிக நீளமான வீடியோவை TikTok இன் கால வரம்பிற்குள் கொண்டு வர, அதை குறைக்காமல் வேகப்படுத்த முடிவு செய்தனர். இந்ததற்செயலான முடிவின் விளைவாக உருவான கீச்சுக் குரல் எதிர்பாராத வகையில் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த குரல்வீடியோக்களுக்கு நகைச்சுவை சேர்த்து, விரைவில் அவர்களின் அடையாளமாக மாறியது. காலப்போக்கில், இந்த உயர் குரல் வடிகட்டிஅவர்களின் வர்த்தகநாமத்தின் தனித்துவமான அம்சமாக மாறி, உள்ளடக்கம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக மாறும் சூழலில் அவர்களைவேறுபடுத்திக் காட்டியது. இப்போது அவர்களின் உண்மையான குரல்களைக் கேட்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. அவர்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை அல்லது எடிட்டிங் திறமை மட்டுமல்ல, மாறாக அன்றாட தம்பதி வாழ்க்கையின் இயல்பானதருணங்களில் வேரூன்றியது. சிறு கருத்து வேறுபாடுகள், உள் நகைச்சுவைகள், வெவ்வேறு ஆளுமைகள். பார்வையாளர்கள் இந்த அன்றாடகணவன்-மனைவி தருணங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். விளையாட்டுத்தனமான உள்ளடக்கத்தை வழங்கினாலும், இருவரும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால் தொழில்முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணிபுரியும்போது, பிரச்சாரம் குறித்த ஆய்வு செய்து, பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில்வர்த்தகநாம செய்தியை படைப்பாற்றலுடன் இணைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் உள்ளடக்கத்திலும், உண்மைத்தன்மையை பராமரிப்பதில்அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை அல்லது எடிட்டிங் திறமை மட்டுமல்ல, மாறாக அன்றாட தம்பதி வாழ்க்கையின் இயல்பானதருணங்களில் வேரூன்றியது. சிறு கருத்து வேறுபாடுகள், உள் நகைச்சுவைகள், வெவ்வேறு ஆளுமைகள். பார்வையாளர்கள் இந்த அன்றாடகணவன்-மனைவி தருணங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். விளையாட்டுத்தனமான உள்ளடக்கத்தை வழங்கினாலும், இருவரும் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால் தொழில்முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர். வர்த்தகநாமங்களுடன் இணைந்து பணிபுரியும்போது, பிரச்சாரம் குறித்து ஆய்வு செய்து, பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டும் வகையில்வர்த்தகநாம செய்தியை படைப்பாற்றலுடன் இணைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் உள்ளடக்கத்திலும் உண்மைத்தன்மையை பராமரிப்பதில்அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் சிறந்த முகாமையாளர்கள் விருதுகள் விழாவில் தேசிய அங்கீகாரத்துடன் தலைமைத்துவச் சான்றுகளை வலுப்படுத்திய HNB பொது காப்புறுதி
HNB பொதுக் காப்புறுதியானது கொழும்பு லீடர்சிப் அகாடமியினால் ஒழுங்கமைக்கப்பட்ட, பெருமைமிகு சிறந்த முகாமையாளர் விருதுகள் 2024 இல் அதனது இரு சிரேஸ்ட முகாமையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்க தனித்துவமான தலைமைத்துவத்தினை…
சிறப்புக்களை கொண்டாடுதல்: வருடாந்த வியாபார விருதுகளில் ஊழியர்களது சாதனைகளை கௌரவித்த SDB வங்கி
SDB வங்கியானது 2024 ஆம் ஆண்டிலான குறிப்பிடத்தக்க செயலாற்றுகைகளுக்காக அதனது ஊழியர்களது அதிசிறப்பான பங்களிப்புக்களை கௌரவிக்கவும் பாராட்டவுமாக அதனது பெருமைமிகுந்த SDB வங்கி வருடாந்த வியாபார விருதுகள் விழாவினை…