இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான”நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்” (Improving Transparency for Sustainable Business – ITSB) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை உலகளாவிய அறிக்கை முன்முயற்சி (GRI) தெற்கு ஆசியா, இலங்கையின் நிலைத்தன்மைவளர்ச்சி மன்றம் (SDC), ஏற்றுமதி வளர்ச்சிக்கான சபையம் (EDB) மற்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) ஆகியனஇணைந்து முன்னெடுக்கின்றன. Swedish International Development Cooperation Agency (SIDA)இன் ஒத்துழைப்புடன், தெற்காசியாவில் உள்ள ITSB திட்டம், பெரியசர்வதேச நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஜவுளி மற்றும் ஆடை நிறுவனங்கள் முழுவதும் நீண்டகால திறனைவளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. பங்கேற்கும் நிறுவனங்கள், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட GRI தரநிலைகளைப் பயன்படுத்தி, தொழிலாளர் நடைமுறைகள், காலநிலை தாக்கம், எரிசக்தி பயன்பாடு, பொருளாதார தாக்கம் மற்றும் கழிவு நிர்வகிப்பு உள்ளிட்ட முக்கியநிலைத்தன்மை தலைப்புகள் குறித்து வெளிப்படையாகப் புகாரளிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியைப் பெறுவார்கள். வணிகங்களுக்குஅப்பால், இந்த முன்முயற்சியானது கட்டுப்பாட்டாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் குழுக்கள், ஊடகங்கள் மற்றும்கல்வித்துறை உள்ளிட்ட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச நடிகர்களுடன் நெருக்கமாக செயல்படும். முழு நாள் திறன் மேம்பாட்டு அமர்வு 2025 ஜூலை 16 அன்று Courtyard by…
Year: 2025
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் CSDDD குறித்த உயர்மட்ட மாநாட்டை ஏற்பாடு செய்த SLAEA
ஜூலை 9 அன்று, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SLAEA) கொழும்பு 07 இல் உள்ள ஜெட்விங்ஹோட்டலில் ஒரு முக்கிய தொழில்துறை கருத்தரங்கை நடத்தியது. இந்த நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுறவு நிலைத்தன்மைக்கானஉரிய விடாமுயற்சி கட்டளை (CSDDD) இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இலங்கை ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வையும் தயார்நிலையையும் மேம்படுத்துவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது. இக்கட்டளையின் பரந்த தாக்கம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில், குறிப்பாக ஆடை, தேயிலை மற்றும் ரப்பர் போன்ற முக்கியதுறைகளில், எவ்வாறு இருக்கும் என்பதை இது குறிப்பாக எடுத்துக்காட்டியது. இந்தக் கருத்தரங்கில் ஆடை உற்பத்தியாளர்கள், ஆலோசகர்கள், சட்ட வல்லுநர்கள், பொதுத்துறை பிரதிநிதிகள், மற்றும் தேயிலை, ரப்பர் போன்ற பல்வேறு தொழில்துறைகளைச்…
City of Dreams Sri Lanka – ஒரு தேசிய மாற்றத்தின் மைல்கல்
இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டமாகவும், தெற்காசியாவின் முதல்ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழும் “City of Dreams Sri Lanka” (COD SL) அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆடம்பரமும், உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஒருதனித்துவமான இடமாக இந்த City of Dreams Sri Lanka, இலங்கையின் லட்சியங்கள், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொலைநோக்குப்பார்வையின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. இலங்கை மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய City of Dreams Sri Lankaவின் அங்குரார்ப்பண விழா, கண்கவர்நிகழ்ச்சிகளும் உணவு விருந்து நிகழ்வுகளும் நிறைந்து விளங்கியது. இந்த நிகழ்வின் போதே, புத்தாக்கமான அணுகுமுறைகள் மூலம் ஒருபிரமாண்டமான அனுபவத்தை உருவாக்க முனைந்த City…
உணர்வு, உருவம் மற்றும் வடிவமைப்பின் எதிர்காலத்தை வெளிப்படுத்தி இலங்கையில் கலர்நெக்ஸ்ட் 2025இனை வெளியிட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே
கொழும்பு இம்பீரியல் மோனார்க்கில் அற்புதமான ஒரு மாலையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது அதனது முக்கியநிகழ்வான, கலர்நெக்ஸ்ட் 2025 இன் இரண்டாம் பதிப்பினை நடாத்தியது. வர்ணம் மற்றும் உருவ நுண்ணறிவிற்கெனநம்பகமான மேடையாக தென்னாசியா முழுதும் அறியப்பட்டுள்ள, கலர்நெக்ஸ்டானது உலகளாவிய வடிவமைப்புஎதிர்வுகூறலுடன் உணர்வுகளின் ஒத்திசைவினை ஒருங்கிணையச் செய்து அபரிதமாக ஆய்வுசெய்யப்பட்ட வருடாந்தஎதிர்வுகூறலினை வெளிப்படுத்தியது. ஏசியன் பெயிண்ட்ஸின் நவீனமயமான R&D தகவுகள் மற்றும் சர்வதேச வடிவமைப்பு உயிர்வகைமை என்பவற்றின் ஆதரவுடன்,கலர்நெக்ஸ்ட் என்பது வெறுமனே ஒரு எதிர்வுகூறலாக அன்றி – அறியப்பட்டு பகிரப்பட்ட புதிதாக தோற்றம்பெற்றுவரும்வண்ணங்களின் உணர்வுகள், பொருள்சார் புத்தாக்கங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் என்பவற்றை ஊடுகாட்டும்கண்ணாடியாகவும் காணப்படுகின்றது. யதார்த்த உலகத்தின் உள்முகத் தோற்றங்களை வடிவமைப்பு பாஷைகளில்மொழிபெயர்க்க இணைந்து பணியாற்றும் சமூகவியலாளர்கள், கட்டிட கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்பங்கேற்ற வருடக்கணக்கான நீண்ட செயன்முறையிலிருந்து இவ்வருடாந்த புத்தாக்கமானது வகுக்கப்பெறுகின்றது. இதுகலர்நெக்ஸ்ட்டினை நிகழ்கால போக்குகளை எதிர்வுகூறுவதற்கு மாத்திரமின்றி அவற்றை வடிவமைப்பதற்குமாகஇத்தொழிற்றுறைக்கான சக்திவாய்ந்த கருவியாக்குகின்றது. 2025 ஆம் ஆண்டிற்கான வண்ணமாக இவ்வருடத்தின் எதிர்வுகூறலில் ஒண்சிவப்பு நிறம் (கார்டினல்) மகுடம் சூடியது. ஆத்மார்த்தமான, கருஞ்சிவப்பான, ஒண்சிவப்பு நிறமானது அதீத செறிவினை – ஆழமானதும் உணர்வுபூர்வமானதுமாகஉள்ளடக்கியுள்ளது. இது ஒரு ஏக்கம் மற்றும் அகப்புறநோக்கம் முதல் நெகிழ்வுத்தன்மை மற்றும் புத்தாக்கம் வரையில், மனிதஉணர்வுகளின் ஆழத்தினையும் நுணுக்கங்களையும் பேசுகின்றது. கட்டிட வடிவமைப்பு, உட்புற வடிவமைப்போ அல்லதுதனிப்பட்ட உணர்வு வெளிப்பாடோ, கார்டினலானது உணர்வு மற்றும் உரையாடலுக்கான வெளியாக வண்ணத்துடன்பங்கேற்பதற்கு வடிவமைப்பாளர்களை வரவேற்கின்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ஏசியன் பெயிண்ட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவெட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு.ஜோசப் ஏபன், அவர்கள் ஆய்வு மைய புத்தாக்கம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைவுகளுக்கான வர்த்தக நாமத்தின்அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார். ஏசியன் பெயிண்ட்ஸின் பிராந்திய தலைவர், திரு. புத்தாதிடியா முகர்ஜி, ஏசியன்பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ்கோஸ்வேயின் இலங்கைக்கான சந்தைப்படுத்தல் தலைவர், திரு. அனுராதா எதிரிசிங்க ஆகியோரது பிரதம உரைகளுடன்கட்டிடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரின் அதிமுக்கிய ஒன்றுகூடலையும் அம்மாலைஅலங்கரித்திருந்தது. கலர்நெக்ஸ்ட்டின் பிராந்திய சிறப்பம்சம் குறித்து கருத்துரைக்கையில், திரு. முகர்ஜி அவர்கள், “கலர்நெக்ஸ்ட்டானதுவடிவமைப்பு நுண்ணறிவு மற்றும் சந்தை எதிர்வுகூறலின் உச்சகட்டமாகும். எமக்கு, இது வெறுமனே ஒரு வண்ணத்தகடு அல்ல – வடிவமைப்பினில் செல்வாக்கு செலுத்தும் உணர்வுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களினை எதிர்பார்க்கும்தொழில்முறையாளர்களுக்கு நாம் உதவக்கூடிய ஊடுகாட்டும் கண்ணாடியாகும். அடையாளம் மற்றும் காலநிலையுடன்கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு என்பன ஆழமாக பிணைப்புற்றுள்ள இலங்கையில், கலர்நெக்ஸ்ட்டானதுவழிகாட்டியாக – உள்ளுர் உணர்வெழுச்சிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில் நவீன வாழ்வியலை எமது பங்குதாரர்கள்வடிவமைக்க உதவுமொன்றாகியுள்ளது. உலக வடிவமைப்பு கருத்தாக்கங்களில் இலங்கையும் ஒரு பங்காளராக விளங்குவதனைஇது உறுதிப்படுத்தியுள்ளது.”’ என்றார். ஒண்சிவப்பு நிறத்தின் (கார்டினல்) அறிமுகத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்வுகூறலானது இத்துறையின் புத்தாக்கதொழில்முறையாளர்களுக்காக புதிய பொருட்சார் வண்ணப்பேழைகள் மற்றும் கதைகூறும் கருவிகளை வழங்கி – உணர்வுப்பூர்வமான ஆழம், இயற்கையின் மூலக்கூற்று பலம், கலாச்சார நம்பிக்கை, மற்றும் அதியுச்ச எதிர்குரல் என்பவற்றைவெளிப்படுத்தும் நான்கு மிகமுக்கிய போக்குகளின் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மாலைநேர நிகழ்வானது, உலக எண்ணப்போக்குகள் மற்றும் இலங்கையின் வடிவமைப்பு ஆர்வங்களுக்கு இடையிலானபாலமொன்றாக ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வகிபாகத்தினை மீளவலியுறுத்தி நவீனகால போக்குகளின் நிறுவல்களதுஅனுபவபூர்வமான பயணம் மற்றும் ஆண்டுக்கான வண்ணத்தின் சாரமிக்க வெளிப்பாடு என்பவற்றுடன் நிறைவுற்றது.
அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி கட்டமைப்பின்படி, இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20% வரி விகிதம் தொடர்பாக,…
EUNIC x GLX தனது ‘நாம் முன்னெடுக்கும் பாதைகள்’ திட்டத்தை இலங்கை முழுவதிலும் விஸ்தரிப்பு
கொழும்பு, இலங்கை, ஜுலை 2025 – இலங்கை, ஐரோப்பிய ஒன்றிய தேசிய கலாசார நிறுவகங்கள் (EUNIC) மற்றும் Good Life X ஆகியன இணைந்து முன்னெடுக்கும் “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” எனும்…
அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின் தென்னை தொழில்துறைக்கு பாரிய பின்னடைவு – இலங்கை தென்னை கைத்தொழில்சம்மேளனம்
இலங்கையின் தென்னை சார்ந்த பொருட்கள் மீது அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கவுள்ளமை அந்தத் துறையில் பாரிய பின்னடைவைக்கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இப்புதிய தீர்வை வரி, ஆண்டுதோறும் 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருவாய்ஈட்டும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறையை பாதிக்கும் என்பதோடு, ஆயிரக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும்நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இலங்கையின் தென்னை சார்ந்த தயாரிப்புகளை வாங்குகின்ற மிகப்பெரிய நாடாக உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 160 மில்லியன்அமெரிக்க டொலர் மதிப்புடன், துறையின் மொத்த ஏற்றுமதியில் 20% க்கும் அதிகமாக உள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில்சம்மேளனத்தின் கூற்றுப்படி, இப்புதிய தீர்வை வரி விதிப்பால் அமெரிக்க சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மை கடுமையாக பாதிக்கப்படும். பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு சலுகை வர்த்தக உறவுகள் உள்ளதால், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதரத்தைக் கொண்டிருந்தாலும், இலங்கை தயாரிப்புகள் அதிக விலை காரணமாக புறக்கணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்புதிய வரி விதிப்பு தொடர்பில் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் கருத்து தெரிவிக்கையில், “இது வெறுமனே ஒரு கொள்கை மாற்றம் மட்டுமல்ல. இலங்கை பல ஆண்டுகளாக உழைத்து வளர்த்த முழு தொழிற்துறைக்கும் அழிவைஏற்படுத்தும் அடியாகும். எமது தயாரிப்புகள் அவற்றின் தூய்மை, சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்காக உலகம் முழுவதும்அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், 30% வரி அவற்றை வாங்குபவர்களுக்கு கட்டுப்படியாகாததாகமாற்றுகிறது. தரத்தின் காரணமாக அல்ல, விலை காரணமாக மட்டுமே நாங்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவோம். ஆரம்பத்தில்முன்மொழியப்பட்ட 44% இலிருந்து வரி குறைக்கப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், 30% வரி கூட எங்களின் ஏற்றுமதிபோட்டித்திறனுக்கும், இத்தொழிலைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பைஏற்படுத்தும்” என தெரிவித்தார். அமெரிக்க வரி விதிப்பால் ஆபத்தில் உள்ள இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் உலர்ந்த தேங்காய் (desiccated coconut), சுத்தமான மற்றும்சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், கிரீம், இளநீர், தென்னம்நார் தயாரிப்புகள், செயலாக்கப்பட்ட கார்பன் மற்றும்தேங்காய் முந்திரை அடிப்படையிலான தோட்டச்செய்கை ஊடகங்கள் (growing media) ஆகியவை அடங்கும். இவற்றில் பெரும்பாலானவைஇலங்கை உலகச் சந்தையில் முன்னோடியாக அறிமுகப்படுத்திய இந்த உயர்தர ஏற்றுமதிப் பொருட்களை வாங்குபவர்கள் இனி மலிவானநாடுகளிலிருந்து பொருட்களை வாங்க நிர்பந்திக்கப்படுவர். அமெரிக்க வரி விதிப்பானது வெறும் வர்த்தக புள்ளிவிபரங்களை மட்டும் பாதிக்கவில்லை. சிறு விவசாயிகள், பதப்படுத்துபவர்கள், தொழிற்சாலைதொழிலாளர்கள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உட்பட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கள்வாழ்வாதாரத்திற்கு தென்னை தொழிலையே நம்பியுள்ளனர். உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறைகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடிவேலைவாய்ப்புகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஏற்றுமதி தேவை திடீரெனக் குறைவதால், விற்கப்படாத பொருட்கள் உள்நாட்டுசந்தையில் குவிந்து, பண்ணை நுழைவாயில் “farm gate” விலைகள் குறைந்து, ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உயரும் உற்பத்திச் செலவால்பாதிக்கப்பட்ட கிராமப்புற குடும்பங்களின் வருமானம் முற்றிலுமாக துண்டிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். தென்னை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதால், பரந்த பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்எச்சரிக்கை விடுத்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் சரிவை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாகஇலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சீர்திருத்த திட்டத்தின் கீழ் தன்னை ஒரு நம்பகமான, போட்டித்திறன் மிக்க நாடாக நிலைநிறுத்தமுயற்சிக்கும் நேரத்தில், ஏனைய தென்னை உற்பத்தி நாடுகள் சிறந்த கொள்கை ஆதரவு மற்றும் குறைந்த செலவு கட்டமைப்புகளைவழங்குவதால், உள்ளூர் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்துறை செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு மாற்றக்கூடும் அபாயம் உள்ளது. இதனால்வேலைவாய்ப்புகள், மூலதனம் மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளும் நாட்டை விட்டு வெளியே செல்லும் நிலை உருவாகாலாம். இதைக் கருத்தில் கொண்டு, தென்னை தொழில்துறையைப் பாதுகாக்க அவசர மற்றும் ஒருங்கிணைந்த அரசாங்க நடவடிக்கைக்கு இலங்கைதென்னை கைத்தொழில் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், வரிச் சலுகை அல்லது வரிவிலக்குகளுக்கான வாய்ப்புகளை ஆராயஅமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது. முக்கிய சந்தைகளுக்கு நியாயமானஅணுகலை உறுதிப்படுத்தும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்யவும், ஏற்றுமதியாளர்கள் குறுகிய காலத்தில் சந்திக்கும் நெருக்கடிகளைசமாளிக்கவும், நீண்ட கால போட்டித்திறனை மேம்படுத்தவும் அரசு இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இலங்கைதென்னை கைத்தொழில் சம்மேளனம் மேலும் வலியுறுத்துகிறது.…
Ideal Motors உடன் இணைந்து மஹிந்திரா வர்த்தக வாகனங்களுக்கு விசேட லீசிங் சலுகையை வழங்கும் HNB PLC
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Mahindra Bolero City Pickups, ALFA Plus Load Carriers, Mahindra…
“SDB வியாபார பிரதிபா 2025” வர்த்தக சந்தை ஊடாக உள்ளுர்தொழிற்முயற்சியாண்மையாளர்களை உயர்த்தும் SDB வங்கி
உள்ளுர் தொழில்முயற்சியாண்மையாளர்களை உயர்ச்சியடையச் செய்தல் மற்றும் அவர்களுக்காக புதிய சந்தைகளைத்திறத்தல் என்பவற்றுக்கான அதனது அயராத அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, SDB சமீபத்தில் எப்.ஆர்.சேனநாயக்கமாவத்தையிலுள்ள கொழும்பு நகர சபை மண்டப வளாக முன்றலில், “SDB வியாபார பிரதீபா 2025” வர்த்தக சந்தைதுவக்க விழாவினை பெருமையுடன் நடாத்தியது . இந்நிகழ்வானது SDB வங்கியின் கிராமிய எழுச்சிநிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், அது மேல் மாகாண ஆளுநர், திரு. ஹனிப் யூசுப்; SDB வங்கியின் தவிசாளர், திருமதி டினிதி ரத்நாயக்க; நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றுஅதிகாரி, திரு. கபில ஆரியரத்ன; மற்றும் SDB வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ அணி என்பவற்றின்பங்கேற்பினால் சிறப்பிக்கப்பட்டிருந்தது. இச்சந்தையானது பாரம்பரிய உணவு மற்றும் பானங்கள், பதப்படுத்தப்பட்டஉணவுகள், சூழல் நேய உற்பத்திகள், கைவினைப்பொருட்கள், மற்றும் பத்திக் கைதறி ஆடைகள் போன்ற பல்வேறுஉற்பத்திகளினை சிறப்பம்சமாக கொண்டிருந்ததுடன், 100 அதிசிறப்பான உள்ளுர்தொழில்முயற்சியாண்மையாளர்களின் பன்முக திறன்களை வெளிப்படுத்துவதாகவும் காணப்பட்டது. அதனது துவக்கம் முதலே, SDB வங்கியின் கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை முழுதுமானசுயதொழில்வாண்மையாளர்களை வலுப்படுத்துவதற்கான கருவியாகவே விளங்கிவந்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள், பிரதேச செயலகங்கள், மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடனான ஒருங்கிணைவினை வளர்ப்பதன் ஊடாக, நாடளாவியரீதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3000 இற்கும் மேற்பட்ட சுயதொழில்வாண்மையாளர்களுக்குவெற்றிகரமாக பலனளித்துள்ளது. இப்பயணத்தின் ஒரு அங்கமாக, SDB வங்கியானது உயர் தரத்திலான உற்பத்திபொருட்களை விற்பனை செய்வதன் ஊடாக, குறிப்பிடத்தக்க வருமானம் மற்றும் அங்கீகரிக்கப்படும் நிலையைஉருவாக்கி, வர்த்தக சந்தை அனுபவத்தினை பழக்கப்படுத்திக்கொள்ள இச்சுயதொழில்வாண்மையாளர்களுக்கு உதவபல சிறிய அளவிலாள சந்தைகளை உருவாக்கியிருந்தது. SDB வங்கியினால் இச்சந்தையை ஒழுங்கமைப்பதன் மையநோக்கமாக, இவ்வடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டதாக, “SDB வியாபார பிரதீபா 2025”, இச்சிறியவிலானஉள்ளுர சுயதொழில்வாண்மையாளர்களின் உற்பத்திகள் மற்றும் வர்த்தக நாமங்களிற்கான புதிய சந்தைவாய்ப்புக்களையும், புதிய வாடிக்கையாளர் பிரிவுகளையும் மற்றும் நல்ல அங்கீகாரத்தினையும் திறந்துள்ளது. இந்நிகழ்வின்போது, இவ்வுள்ளுர் சுயதொழில்வாண்மையாளர்களின் வியாபாரத்தினை மேலும் விளம்பரப்படுத்துவதற்காக SDB வியாபார பிரதீபா மார்க்கெட் பிளேஸ் எனும் தலைப்பில் சந்தை வடிவில் முகநூல்சமுதாய குழுவொன்றையும் ஆரம்பித்துள்ளது. இப்புத்தாக்கமான மேடையானது அவர்களது அடைவுகளைவிரிவுபடுத்துவதற்கும் தங்களது உற்பத்திகளை பரந்த வாடிக்கையாளர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்கும் ஆர்வமிகுவாயப்புக்களை வழங்குவதுடன், வளர்ச்சி மற்றும் அறியப்படுவதற்கான புதிய பாதைகளையும் உருவாக்கியுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றும்போது, நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்னஅவர்கள், “எம்முடைய கிராமிய எழுச்சி நிகழ்ச்சித்திட்டமானது ஒரு துவக்கம் என்பதற்கும் அப்பாலானது; இது உள்ளுர்சுயதொழில்வாண்மையாளர்களை கிராமிய சமுதாய எழுச்சியூடாக வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கத்தினைமுற்செலுத்தவும் மற்றும் எமது தேசத்தின் சுயதொழில்வாண்மையாளர்களது திறனுக்கான வாய்ப்புக்களைஉருவாக்குவதற்குமான செயற்பாடாகும். எம்முடைய சொந்த சுயதொழில்வாண்மையாளர்களது திறன்களையும்புத்தாக்கத்தினையும் மதித்து வளர்க்கும் வங்கியொன்றாக, அவர்களது அனைத்து வகையான வியாபாரநடவடிக்கைகளின் அபிவிருத்தியிலும் ஆதரவளிப்பதில் மிக்க பெருமிதம் கொள்கின்றோம்.” என்றார். இவ்வர்த்தக சந்தை மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சந்தை இடங்கள் என்பவற்றின் ஊடாக, SDB வங்கியானதுஇலங்கையின் அபிவிருத்தி வலு மையமாக விளங்கும் அதன் நோக்கத்தினை விரிவுபடுத்தியுள்ளது. வியாபராவளர்ச்சிக்கான விலைமதிப்பற்ற மேடையொன்றினை உருவாக்கியிருப்பதன் ஊடாக, ஒரு நேரத்தில் ஒருவியாபாரத்திற்காக சுயதொழில்வாண்மை கிடைப்பரப்பை நிலைமாற்றுவதனை தொடரும்.
சலுகை அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்க இலங்கைஇராணுவத்துடன் இணைந்த சுவசெவன மருத்துவமனை
கண்டியில் உள்ள முன்னணி தனியார் சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான சுவசெவனமருத்துவமனை, இலங்கை இராணுவத்திற்கான ‘சுவசெவன காப்புறுதித் திட்டத்தின்’ கீழ் இராணுவ வீரர்களுக்குசலுகை அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்காக இலங்கை இராணுவத்துடன்கைகோர்த்துள்ளது. இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டதன் மூலம், தேசத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை ஆதரிப்பதில் சுவசெவனவின்உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தின் சார்பாக பிரிகேடியர் பெனாண்டோ, மேஜர்தனுஷ்க குமார மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் பிரேமச்சந்திர ஆகியோர் கைச்சாத்திட்ட அதே நேரத்தில்சுவசெவன மருத்துவமனை வணிக மேம்பாட்டுத் தலைவர் ஸ்ரீமத் வெலிவிட்ட, சந்தைப்படுத்தல் நிர்வாகி மிஸ்லக்ஷானி பெரேரா மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி அஷான் பிரேமச்சந்திர ஆகியோர் மருத்துவமனையைபிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இராணுவ உறுப்பினர்களுக்கு பல்வேறு பிரத்தியேகசலுகைகளை வழங்கும், தரமான மருத்துவ சேவைக்கான உயர்ந்த அணுகலை சுவசெவன மருத்துவமனை உறுதிசெய்யும். இந்தக் கூட்டாண்மையின் கீழ், சுவசஹன காப்புறுதித் திட்ட உரிமையாளர்களுக்கு இதில் இணைவதற்கானஆரம்ப கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுவதோடு, OPD வருகைகளுக்கான இலவச ஆலோசனைகள் மற்றும்பல்வேறு மருத்துவ சேவைகளில் முக்கிய தள்ளுபடிகள் ஆகியன வழங்கப்படும். CT Scans, MRI, Mammograms, X-rays, Ultrasounds உள்ளிட்ட ஆய்வக சோதனைகள் மற்றும் கதிரியக்க சேவைகளில் 20% தள்ளுபடியுடன்கூடிய கட்டணக் கழிவு வழங்கப்படும். ECHO மற்றும் ECG சோதனைகளுக்கும், உள்நோயாளி பராமரிப்புக்கானஅறைகளுக்கான கட்டணங்களுக்கும் இதே தள்ளுபடி வழங்கப்படும். அது மாத்திரமன்றி, இருதய பைபாஸ்அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ரூ. 50,000 தள்ளுபடி மூலம் பயனடைவார்கள். அதே நேரத்தில்மருத்துவமனையிலிருந்து 10 கிமீ சுற்றளவில் உள்ளவர்கள் இலவச அம்பியூலன்ஸ் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த சுவசெவன மருத்துவமனையின் பிரதம நிறைவேற்று அதிகாரிநளின் பஸ்குவல், “இலங்கை இராணுவம் எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை ஆற்றியுள்ளது. மேலும் இந்த முயற்சியின் மூலம் அவர்களின் சுகாதாரத்தேவைகளை ஆதரிப்பது எமது பாக்கியமாகும். சுவசெவன மருத்துவமனை ஆகிய நாம், உயர்தரம் மிக்க, அனைவரும் அணுகக்கூடிய மருத்துவ சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளோம். அத்துடன் இந்த கூட்டாண்மைஎமது நாட்டிற்கு சேவை செய்பவர்களுக்கு நாம் சேவை செய்வது தொடர்பில் கொண்டுள்ள தொடர்ச்சியானஅர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார். சுவசஹன நலன்புரி காப்புறுதித் திட்டம் ஆனது, இராணுவ வீரர்களுக்கு விரிவான மருத்துவ மற்றும் நிதிஉதவியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான சுகாதார முயற்சியாகும். இந்தத் திட்டம்மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், கடுமையான நோய்கள் மற்றும் அவயவம் செயலற்றுப் போதல் தொடர்பானசெலவுகளுக்கு காப்புறுதிகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சேவைஆற்றுபவர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது. சுவசெவன மருத்துவமனை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நோயாளர்பராமரிப்புடன், கண்டியில் சுமார் நான்கு தசாப்தங்களாக, சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நம்பகமான பெயராகதிகழ்ந்து வருகிறது. மிக வசதியாக நகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, உயர் பயிற்சி பெற்றநிபுணர்களின் குழு மூலம் முழு அளவிலான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இலங்கையின்மலைநாட்டுத் தலைநகரில் ஆறுதளிக்க்கும் வகையிலும், நோயிலிருந்து மீட்சி பெறவுமாக வடிவமைக்கப்பட்ட150 சொகுசான, தரமான அறைகளுடன், மருத்துவச் சிறப்பின் மிக உயர்ந்த தரத்தை வழங்குவதில் சுவசெவனஉறுதிபூண்டுள்ளது.