SDB வங்கியானது தமிழ்-சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதனது முக்கிய சேமிப்பு பிரச்சாரமான ‘SDBஇதுறும் சரித்ரய’ வின் 2025 ஆண்டிற்கான பதிப்பு வெளியீட்டினை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. இத்துவக்கமானது விசுவாசமிக்க மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துஉற்சாகமிகு பரிசுகளுடன் சேமிப்புக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலிருக்கும் இப்பிரச்சாரமானது கவர்ச்சிகரமான பரிசுத் திட்டங்களுடன் விசேடமாகவடிவமைக்கப்பட்டுள்ள SDB சேமிப்பு சான்றிதழ்களில் முதலிடுவதற்கான தனித்துவமான வாய்ப்பினைவாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. ரூ. 100, 000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்கள் நவீனபயணப்பையொன்றையும் ரூ. 250, 000 வைப்பிலிடும் வாடிக்கையாளர்கள் 1.5 லீ ரைஸ் குக்கர் ஒன்றினையும் பரிசாகப்பெறுவர். அதேசமயம், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சங்கங்கள் என்பனவும் பயணப் பை ஒன்றையும் துருப்பிடிக்காததெர்மோஸ் பிளாஸ்க் ஒன்றினையும் முறையே ரூ. 250,000 அல்லது ரூ. 500,000 வைப்புகளுக்கு பெறுகின்றன. இப்பிரச்சாரமானது புதுவருட இதுறும் சரித்ரய (சேமிப்பு) இனை விளம்பரப்படுத்தவும், புதிய சேமிப்புக்களைஊக்குவிக்கவும் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்தவுமாக நோக்கங்கொண்டுள்ளது. இது அதனது சேமிப்புமையத்தையும் மற்றும் புதிய வாடிக்கையாளர் பிரிவுகளை அடையவுமான SDB வங்கியின் பரந்த பார்வையுடன் தடையறஒருங்கிணைக்கின்றது. இப்பிரச்சாரம் குறித்து கருத்துரைக்கையில் SDB வங்கியின் சிரேஷ்ட வியாபார அதிகாரி திரு. சித்ரால் டி சில்வாஅவர்கள் ‘SDB வங்கியின் ‘இதுறும் சாரித்ரய’வடன் பாரம்பரியமும் மீளாக்கமும் நிறைந்த இக்காலப்பகுதியில்இலங்கையர்கள் மத்தியில் சேமிப்பின் காலந்தாண்டிய பெறுமதியை விதைக்க நோக்கங்கொண்டுள்ளோம். இத்துவக்கமானது நிதித் திட்டமிடல் மாத்திரமன்றி எமது வாடிக்கையாளர்களது நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கானஎமது பாராட்டுதல்களின் வெளிப்பாடுமாகும். உற்சாகமிகு ‘இதுறும் சரித்ரயா’ வினை தழுவிக்கொண்டு இத்தமிழ்சிங்களப் புத்தாண்டில் தொடங்கும் உங்களது வாழ்வின் மிகமுக்கிய பாகமான சேமிப்புப் பழக்கத்தினை எம்முடன்இணைந்து மேற்கொள்ள அனைத்து இலங்கையர்களையும் இருகரம் நீட்டி வரவேற்கின்றோம்.’ என்றார். கிராமிய சமூகங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் மற்றும் சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் சுயதொழில்வாண்மையாளர்களை- பெண்சுயதொழில்வாண்மையாளர்களுக்கான விசேட கவனத்துடன்- வலுவூட்டவும் தெளிவான நோக்கங்கொண்டுள்ளவங்கியொன்றாக – SDB வங்கியானது புத்தாக்கமானதும் உள்ளடக்கமிக்கதுமான நிதிசார் தீர்வுகளை தொடர்ந்தும்வழங்கும். இப்பிரச்சாரத்தினை புதிய ஆரம்பம் மற்றும் செழுமையினைக் குறிக்கும் பருவமொன்றான புதுவருடக்காலத்தில் வெளியிட்டு SDB வங்கியானது அனைத்து இலங்கையர்களுக்கும் வங்கியுடன் பங்குதாரராவதற்கும்இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக விளங்கும் சிறிய மற்றும் நடுத்தர சுயதொழில்வாண்மைக்குகுறிப்பிடத்தக்களவில் பங்களிப்பதற்குமான வாய்ப்பொன்றினை வழங்குகின்றது. SDB வங்கி: வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமானஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின்பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால்ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தரதொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின் பொருத்தமானவகைகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களைஉயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின்நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானது இலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனைநோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறானஅபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Month: சித்திரை 2025
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியியல் பெறுபேறுகளை அடைந்துள்ளது
2025 ஏப்ரல் 4, கொழும்பு : ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் 2024ஆம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதுடன், காப்புறுதித்துறை சந்தையின் முன்னணியாளர் என்ற…
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்தைகளில் அரசாங்கம் முன்வைத்த திட்டங்களை பாராட்டுவதுடன், ஆடைஏற்றுமதிக்கு சமமான சுங்க வரி நன்மைகளை எதிர்பார்க்கும் JAAF
வொஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) இலங்கை அரசாங்கம் நடத்தியஇணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியைதெரிவித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடுநிலையான மற்றும் நியாயமான வர்த்தகஉறவுகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தூதரககுழுவினருக்கு JAAF தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகால வணிக கூட்டாளியாகதொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தத் தொழிற்துறை நேரடியாக 350,000 பேருக்கும், நாடு முழுவதும் மேலும்700,000 பேரின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக உள்ளது. எனவே, தற்போதுள்ள வர்த்தக சுங்க வரிகளை நீக்குவதற்கும், சர்வதேச வணிக சந்தையில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் போட்டித்திறனை பராமரிப்பதற்கும் அரசாங்கம்மேற்கொள்ளும் முயற்சிகளை JAAF பாராட்டுகிறது. எந்தவொரு புதிய சுங்க வரி ஒப்பந்தத்தின் மூலமும், ஆடை உற்பத்தி செய்யும் பிற நாடுகளுக்கு வழங்கப்படும் வர்த்தகசலுகைகள் இலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் என JAAF எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக, தேசியபொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மற்றும் நெறிமுறை உற்பத்தி நடைமுறைகளுக்காக உலகளவில்பெயர் பெற்ற இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வெற்றியை கருத்தில்கொள்ளுமாறு JAAF இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது. இருதரப்பு வணிக ஒப்பந்தத்தை நோக்கி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, இலங்கையின் ஆடைத் தொழிற்துறை உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு படியையும் கண்காணிக்கும் திறன் (traceability), வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கான சர்வதேச தரங்களை பின்பற்றுகிறது என JAAF மீண்டும்வலியுறுத்துகிறது. எனவே, இலங்கைக்கு சிறப்பு சுங்க வரிச் சலுகைகள் வழங்கும் போது இந்த அர்ப்பணிப்பை கருத்தில்கொள்ள வேண்டும் என்பதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது. சர்வதேச வணிக சந்தையில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர்மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றுடன், பொறுப்பான முறையில் ஆடைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குஇலங்கை நம்பகமான மற்றும் கவர்ச்சிகரமான இலக்கு என்பதில் JAAF உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.இரண்டு அரசாங்கங்களுக்கிடையே தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்து JAAF நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது. வணிகத்தை விரிவுபடுத்தவும், மேலும் முதலீடுகளை ஈர்க்கவும், இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தரக்கூடிய எதிர்கால வணிகஒப்பந்தத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்த மன்றம் தெரிவித்துள்
மூலோபாய வங்கிக்காப்புறுதி பங்குடைமையில் இணையும் HNB பொதுக்காப்புறுதி மற்றும் யூனியன் வங்கி
HNB பொதுக் காப்புறுதியானது புத்தாக்க காப்புறுதித் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மூலோபாய வங்கிக்காப்புறுதி உடன்படிக்கை ஊடாக யூனியன் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இப்பங்குடைமையானது வங்கியின்…
அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai உடன் இணையும் HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குநரான HNB FINANCE, ஒரு நவீன மைய வங்கி அமைப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு, டிஜிட்டல் நிதித் தீர்வுகளின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Kiya.ai உடன் ஒரு உத்தியோகபூர்வ கூட்டு ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டது. HNB FINANCEஇன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தைமேம்படுத்தவும், அனைத்து ATM இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு சேர்வு மூலம், CASA (Current and Savings Accounts), Trade Finance மற்றும் திரைசேரி செயல்பாடுகள் போன்ற அடிப்படை வங்கிநடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக Kiya.ai மூலம் உருவாக்கப்பட்ட புதிய டிஜிட்டல் Core Banking System செயல்படுத்தப்படும். SaaS (Software as…
Eco Go Beyond 2024 Awards நிகழ்வில் இலங்கையின்எதிர்கால நிலைத்தன்மை முன்னோடிகளை சிறப்பித்த MAS
உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கானதன்னுடைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிகழ்வு ஏப்ரல் 4, 2025 அன்று துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில்நடைபெற்ற MAS Eco Go Beyond நிலைத்தன்மைக் கல்வி நிகழ்ச்சி 2024 விருது வழங்கும் நிகழ்வில் இடம்பெற்றது. இளைஞர்களின் சிறந்த நிலைத்தன்மை சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்வில், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) தலைவி பிரியானி அமரசிங்க மற்றும் GEF Small Grants Programme இன் தேசிய வழிகாட்டு குழுத் தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகபங்கேற்றனர். கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் MAS நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில்கலந்து கொண்டனர். ஓராண்டு நீண்ட பயணத்தின் உச்சக்கட்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்தது. இந்தப் பயணத்தில் பட்டறைகள், பயிற்சித்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் தலைமையிலான நிலைத்தன்மை முயற்சிகள் என்பன அடங்கியிருந்தன. இவை உள்ளூர் சமூகங்களில்சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டவை. MAS Holdings நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பித்த Eco Go…
இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளுடன்சிறப்பான வரவேற்புகளை வழங்கும் HNB
வணிக கூட்டாளர்கள் 300 பேரிடமிருந்து 70% வரை தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத எளிய தவணை திட்டங்களுடன் சிறப்புப் பரிசுகளைவெல்லும் வாய்ப்பை வழங்குகிறது இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதன் கிரெடிட் மற்றும் டெபிட்கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைவழங்கியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், HNB கார்ட்உரிமையாளர்களுக்கு 70% வரை அசாதாரண தள்ளுபடிகள், வட்டி இல்லாத தவணை செலுத்தும் வசதிகள் மற்றும் விசேஷ பரிசுகளைவெல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல்பொருள் அங்காடி, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள், இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் சூரிய சக்தி தீர்வுகள்உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த பண்டிகைக் காலத்தில் HNB தனது வாடிக்கையாளர்களுக்குஅசாதாரண சேமிப்பு வாய்ப்புகளுடன் சிறப்பான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் செயல்படும் இந்த சலுகைகளை அனுபவித்து, பண்டிகைக் காலத்தில் விரும்பியபடி ஷாப்பிங் அனுபவத்தை HNB கார்ட்உரிமையாளர்கள் இப்போது அனுபவிக்கலாம்.…