தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வே

இலங்கையின் முன்னணி நிறப்பூச்சு தயாரிப்பாளரான, ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது, அங்கொடை தேசிய மனநல நிறுவகத்தின் உளவியல் அலகில் நிலைமாறு வர்ணப்பூச்சு செயற்றிட்டத்தினை முன்னெடுத்தமையினால் சமுதாய…

SDB இன் தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக ஆளுமைமிக்க வங்கியலாளரானசிட்ரல் டி சில்வா

SDB வங்கியானது அதன் பெருநிறுவன முகாமைத்துவ அணியின் Deputy General Manager/Chief Business Officer ஆக  திரு. சிட்ரல் டி சில்வா அவர்களின் நியமனத்தினை அறிவிப்பதில் பெருமிதமடைகின்றது. வங்கியியல் துறையில் நான்கு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட தனித்துவமான தொழில் அனுபவத்துடன், திரு. டிசில்வா அவர்கள் நிலைமாறு வளர்ச்சியினை முன்னெடுப்பதில் அனுபவ செல்வத்தினையும் நிருபிக்கப்பட்டசாதனைகளையும் ஒருங்கே கொணர்கின்றார்.  திரு. டி சில்வா அவர்களது புகழ்மிக்க தொழிற்பயணமானது அவர் வங்கியியல் செயற்பாடுகளில் தன்னுடையதிறன்களை தீட்டிக்கொண்ட, டொய்சு வங்கியிலிருந்து ஆரம்பமாகின்றது. பின்னர் அவர் நிறுவனத்தின்வெற்றிக்காக அதிமுக்கிய பங்குவகித்த, செலான் வங்கியில் சிரேஷ்ட தலைமைத்துவ பாகத்தினை வகித்தார். கிளை வங்கியியல் செயற்பாடுகள், அபிவிருத்தி வங்கியியல், மீளப்பெறல்கள், பணவலுப்பல் மற்றும் மூலோபாயவியாபார பெறுபேறுகளை விநியோகித்தல் என்பன அவரது நிபுணத்துவமிக்கப் பகுதிகளை உள்ளடக்குகின்றன. மரபார்ந்த வங்கியியலிற்கு அப்பால், திரு. டி சில்வா அவர்கள் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் வாடிக்கையாளர்மைய தீர்வுகளில் கவனம்செலுத்தும், சிலிக்கன் வெளியை மையமாகக் கொண்ட தகவல் தொழிநுட்பகம்பெனியான இமோஜிட் உடன் வியாபார அபிவிருத்திக்கான அவரது ஆலோசனை வழங்கலின் ஊடாகதன்னுடைய தகவமைத்துக்கொள்ளல் மற்றும் புத்தாக்க சிந்தனையையும் வெளிப்படுத்தியிருந்தார்.  அவரது தொழிற்பயணத்தின் முழுமையிலும், திரு. டி சில்வா அவர்கள் கிளை வலையமைப்பினை விரிவுபடுத்தல், இலாபத்தினை வளப்படுத்தல், மற்றும் மூலோபாய புத்தாக்கங்களை துணிவுடன் முன்னெடுத்தல் என்பவற்றைஉள்ளடக்கி தொடர்ச்சியாக அதிசிறப்பான பெறுபேறுகளினை வெளிப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் வங்கியியல்தீர்வுகளை அமுல்படுத்தல், செயற்பாட்டு வினைத்திறனை முறைப்படுத்தல், மற்றும் பலமான வாடிக்கையாளர்ஈடுபாட்டினை வளர்த்தல்களிலான அவரது அனுபவமானது SDB வங்கிக்கான ஒரு பெறுமதிமிக்க சொத்தாகஅவரை நிலைப்படுத்துகின்றது.  SDB வங்கியானது புத்தாக்க நிதிசார் தீர்வுகளின் ஊடாக சமுதாயங்களை வலுப்படுத்தும் தனது நோக்கத்தினில்தொடர்ந்தும் அர்ப்பணிப்புமிக்கதாக காணப்படுகின்றது. பெருநிறுவன முகாமைத்துவ அணியிலான திரு. டிசில்வா அவர்களது இணைவானது அதனது தலைமைத்துவத்தினை வலுப்படுத்துவதிலும் அதனதுபங்குதாரர்களிற்கு இணையற்ற பெறுதியினை வழங்குவதிலுமான வங்கியின் அர்ப்பணிப்பினைவெளிப்படுத்துகின்றது.

ஆங்கிலஅணுகல்புலமைப்பரிசில்நிகழ்ச்சித்திட்டத்தின்ஊடாகஇளைஞர்களைவலுவூட்டுவதில் 20 வருடநிறைவைகொண்டாடும்இலங்கைக்கானஅமெரிக்கதூதரகம்

ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆங்கில மொழித் திறன்கள், தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் கலாசாரங்களுக்குஇடையிலான தொடர்புகள் சம்பந்தமாக  1,300 இற்கும் அதிகமான இலங்கை இளைஞர்களை வலுவூட்டியுள்ள மாற்றம்ஏற்படுத்தும் முயற்சியொன்றான ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் (English Access Scholarship Program) 20 ஆவது ஆண்டு நிறைவை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த வருடம் பெருமையுடன்சிறப்பிக்கிறது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டஇந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய 13 வயதுக்கும் 15 வயதுக்கும்இடைப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறன்களில் வலுவான அடித்தளமொன்றை வழங்குகிறது. அதன்இரண்டு வருடம் முழுவதுமான இலவச 360-மணிநேர பாடத்திட்டத்தின் ஊடாக இலங்கை இளைஞர்கள்தலைமைத்துவ பயிற்சி, தொழில்சார் அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் அமெரிக்க கலாசார மற்றும் ஜனநாயகவிழுமியங்களுக்கான வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்கின்றனர். இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்ட அனுபவங்காளனதுசிறந்த கல்வி மற்றும் தொழில்சார் வாய்ப்புகளுக்கான கதவுகளை திறப்பதுடன், எதிர்காலத்தில் அமெரிக்காவிலானபரிமாற்ற மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு போட்டியிடுவதற்கும் மாணவர்களை தயார் செய்கிறது.  ‘இலங்கையில் ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவைகொண்டாடுவதானது, கல்வியின் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதிலான எமது நீடித்த உறுதிப்பாட்டுக்கு சான்றுபகிர்வதாக அமைந்துள்ளது,’ என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார். ‘இந்த நிகழ்ச்சித்திட்டமானதுஅத்தியவசியமான ஆங்கில மொழி திறன்களை வழங்குவதுடன் மட்டுமல்லாது, தலைமைத்துவம், தொழில்சார்அபிவிருத்தி மற்றும் கலசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஊக்குவிக்கிறது. சமூகங்களுக்கு இடையில்இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளைஉருவாக்கியும் நாம் பிரகாசமானதும் அனைவரையும் மேலும் உள்வாங்கிய எதிர்காலமொன்றிலும் நாம் முதலீடு செய்துகொண்டிருக்கிறோம்,’ என்றும் அவர் குறிப்பிட்டார்.    இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டமானது வெறுமனே மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாது, அதுஇலங்கயில் ஆங்கில மொழி கற்பித்தலை வலுப்படுத்துவதுடன், மாணவர்களை உலகளாவிய அணுகல்வலையமைப்பிற்கும் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்துமான சகாக்களுடனும் இணைக்கிறது. இந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆசிரியர்கள் உயர்தரத்திலான பயிற்சிகளை பெறுவதுடன், தேசிய மற்றும்பிராந்திய மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகளுடன் உலகளாவிய பயிற்சி சமூகமொன்றுடனும்இணைந்து கொள்கின்றனர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில், 34 இலங்கை கல்வியலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் முன்னாள் மாணவ சமூகத்தினர் நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெற்ற 20ஆவது ஆண்டு நிறைறையொட்டியபிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்.     ‘நாம் எவ்வாறு கல்வி ரீதியான வாய்ப்புகளை விஸ்தரிக்கிறோம் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில்எவ்வாறு வலுவான உறவுகளை கட்டியெழுப்புகிறோம் என்பதில் இந்த ஆங்கில அணுகல் நிகழ்ச்சித்திட்டமானதுமுக்கியமான அங்கமொன்றாக அமைந்திருக்கிறது,’ என்று அமெரிக்க தூதரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரிஹய்டி ஹட்டன்பேக் தெரிவித்தார். ‘மோதல்களுக்கு பின்னர் மீட்சி அடைந்துவரும் நாடொன்றில், இந்த அணுகல்நிகழ்ச்சித்திட்டமானது ஆங்கிலம் கற்பித்தலுக்கு மேலதிகமாக பல விடயங்களை செய்துள்ளது. அது வேறுபட்டபின்னணிகளிலிருந்தான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றுபடுத்துவதுடன், அவர்களை உலகளாவியவலையமைப்பொன்றுக்கும் இணைக்கிறது. அதுமட்டுமல்லாது, சமூகங்கள் முழுவதும் புரிந்துணர்வு மற்றும்கூட்டிணைவை ஊக்குவிக்கும் அதேவேளை, தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான முயற்சியில்மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறன்களையும் நம்பிக்கையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வழங்குகிறது,’ என்றும்அவர் குறிப்பிட்டார். ஆங்கிலத்தை இணைப்பு மொழியொன்றாக பயன்படுத்தி வேறுபட்ட பின்னணிகளில் இருந்தான மாணவர்களைஇணைப்பதை அணுகல் நிகழ்ச்சித்திட்ட வழங்குனர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிணைப்புகளானது, வாழ்நாள்முழுவதுமான இணைப்புகளை உருவாக்கி இன மற்றும் மத வேறுபாடுகளை கடந்து செல்ல வழிவகுக்கின்றன. ‘பலதரப்பட்ட பின்னணிகளிலிருந்தான மக்களுடன் செயல்படுவதற்கான நம்பிக்கையையும் மற்றும் தெளிவு மற்றும்தன்னம்பிக்கையுடன் உரையாற்றுவதற்கும் விடயங்களை முன்வைப்பதற்குமான திறன்களையும் எனக்கு வழங்கி, இந்தஅணுகல் நிகழ்ச்சித்திட்டமானது நான் மற்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்ளும் விதத்தை மாற்றியது,’ என்றுயாழ்ப்பாணத் சேர்ந்த அணுகல் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாள் மாணவியான மாதங்கி தமது அனுபவத்தைபகிர்ந்துகொண்டுள்ளார். இந்த 20 ஆவது ஆண்டு நிறைவு என்ற மைல்க்கல்லை சிறப்பிக்கும் நிமித்தம் கண்டியில் நடைபெறும் நான்கு நாட்கள்முகாமானது யாழ்ப்பாணம், காலி, குருநாகல், திருகோணமலை, மற்றும் நுவரெலியாவில் இருந்து அணுகல்நிகழ்ச்சித்திட்டத்தில் தற்போது பங்குகொள்ளும் 150 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைக்கவுள்ளது. ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தின் அணுசரனையிலான ஆங்கில மொழி புலமையாளர்கள் தலைமையிலானஊடாடல் அமர்வுகள், ஒரு சமூக சேவை திட்டம் மற்றும் மாணவர்களின் தனித்துவமான அனுபவங்களைவெளிப்படுத்தும் ‘கலாச்சார இரவு’ நிகழ்ச்சி என்பனவும் இந்த நிகழ்வில் இடம்பெறவுளள்ன.  ஏனையபேச்சாளர்களுடன் தூதுவர் ஜுலீ சங்கும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்.    இலங்கையின் மேல் மாகாணத்தைச் சேர்ந்த வெறும் 56 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுகல்நிகழ்ச்சித்திட்டமானது, தற்போது 185 பேர் கொண்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மிகப்பெரிய முன்னாள் மாணவசமூகத்தின் இருப்பிடமான கண்டி உட்பட நாடு முழுவதும் 50 இற்கும் மேற்பட்ட இடங்களைச் சேர்ந்த பழையமாணவர்களைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் 2025-2027 சுழற்சிக்காக, இந்த நிகழ்ச்சித்திட்டமானது யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இருந்தானபாடசாலைகளை சேர்ந்த 150 புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும்.…