2023 ஜபிஎல் கிரிக்கெட் தொடர்: ஜந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்அணி

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி நாணய சுழற்சி  கூட இடம்பெறாத  நிலையில் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இறுதிப் போட்டி நேற்று இந்தியாவின் குஜராத் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இறுதி வரை பரபரப்பாக  நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங் அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற பெருமையை சென்னை கொண்டுள்ளது. இந்தாண்டு கிண்ணத்தை வென்ற சென்னை அணிக்கு பரிசுத் தொகையாக இந்திய நாணயத்தில் ரூ.20 கோடி வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த குஜராத் அணிக்கு இந்திய நாணயத்தில்  ரூ.13 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தொடரில் அதிக ஓட்டங்களை  எடுத்த சாதனை புரிந்த சுப்மன் கில்லிற்கு இந்திய நாணயத்தில்  ரூ.10 லட்சமும், அதிக விக்கெட் எடுத்து பர்பிளுக்கு  முகமது ஷமிக்கு இந்திய நாணயத்தில்  ரூ.10 லட்சமும் பரிசு தொகை வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டேவான் கான்வே இந்திய நாணயத்தில்  ரூ.5 லட்சம் பரிசு தொகையை தட்டிச் சென்றார்.

2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில் வெற்றிக்கிண்ணத்தை  வென்ற அணிக்கு இந்திய நாணயத்தில்  ரூ. 4.8 கோடி பரிசு வழங்கப்பட்டது. தற்போது 15ஆவது சீசன் நடைபெற்ற நிலையில் இந்த பரிசு தொகை இந்திய நாணயத்தில்  ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் இரண்டு சீசனில் ரூ.4.8 கோடியாக இருந்த பரிசு தொகை, 2010இல் நடந்த மூன்றாவது சீசனில் ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன