இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏர் சைனா விமான சேவை

ஏர் சைனா ஏர்லைன்ஸ் Air China Airlines நிறுவனம்   இலங்கைக்கான விமான சேவையை ஜூலை மாதம் முதல் அரம்பிக்கவுள்ளது.  

எயார் சைனா எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று  விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு  தீர்மானித்துள்ளதுடன் இதனைத்தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மேலும் விமான சேவைகளின் எண்ணிக்கையை  அதிகரிக்கவுள்ளதாக  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகைதரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது,ஸ்ரீ லங்கன் மற்றும் சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகியன இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் விமான சேவைகளை  மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன