கொழும்பில் இரண்டு வார டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் 

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்புக்கான விசேட வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது நிலவும் மழையுடனான கால நிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நுளம்புகள் பெருகும் இடங்களை கொண்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன