அந்தமான் கடல் பகுதிக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மோக்கா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14 ஆம் திகதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக மாநில அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு நிலையம்  நேற்று (11) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இதற்கு ‘மோக்கா’ என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியை கடந்து, 13 ஆம் திகதியன்று சற்று வலுவிழந்து, 14ஆம் திகதியன்று மணிக்கு 120 முதல் 145 கி.மீ. வேகத்துடன் வங்கதேசம் மற்றும் மியான்மருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன